தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 30 நாட்கள் கோடை விடுமுறை!
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை தேர்வு இருக்கிறது. தேர்வு முடிந்து மே 13 முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை அதாவது 30 நாட்கள் கோடை விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதித்த காரணத்தினால் ஓரளவுக்கு கொரோனா குறைய ஆரம்பித்தது. இதனால் மீண்டும் பழையபடி பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளுமே மாணவர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை மற்றும் அனைவருமே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அதன்படி மே 5 ஆம் தேதியில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு அனைத்து பாடங்களும் நடத்த முடியாத காரணத்தினால் 35% பாட திட்டங்கள் குறைக்கப்பட்டன. தற்போது 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது.
Exams Daily Mobile App Download
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவும் கிடையாது. ஆனாலும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை வகுப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13 ஆம் தேதி வழக்கம் போல வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 23 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.