1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்கள் பள்ளிகள் விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!

0
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்கள் பள்ளிகள் விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு!
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்கள் பள்ளிகள் விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு!
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்கள் பள்ளிகள் விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் பொதுத் தேர்வுக்கான தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அண்மையில் வெளியிட்டது. மேலும் இதில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான கோடை விடுமுறை குறித்த தகவலும் இடம் பெற்றுள்ளது. இதனை பற்றி விரிவாக பார்ப்போம்.

பள்ளி விடுமுறை

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அத்துடன் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது நேரடி வகுப்புகள் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு – PF நியமனத்தை மாற்றுவதற்கான எளிய வழிமுறைகள்!

அதன்படி இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வுக்கான தேர்வுக் கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அண்மையில் வெளியிட்டது. இதில் தெரிவித்துள்ளதாவது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதே போல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் 13 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கடைசி வேலை நாள் மே 12ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன்படி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு 30 நாட்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!