அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு – முக்கிய அறிவிப்பு!
ஹரியானா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 31% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசி க்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் படி மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தியது. பிறகு மேலும் 3% உயர்த்தப்பட்டு தற்போது 31% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முன்தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு 9,488.70 கோடி ரூபாய் செலவாகும்.
தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசி – அமைச்சார் முக்கிய அறிவுப்பு!
இதனால் ஏராளமான அரசு ஊழியர்களும் ஓய்வூதியதரர்களுக்கும் பயன் பெறுவர் என்றும் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஹரியானா மாநிலம் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அளித்துள்ளது. ஹரியானாவில் அரசு ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புத்தாண்டு பரிசாக 3% அதிகரிக்கப்பட்டு மொத்தம் 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
டிச.28 முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு திடீர் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து அகவிலைப்படி நிவாரணமும் 3 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஹரியானா அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து அடுத்த மாநிலங்கள் அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு மீண்டும் புத்தாண்டு பரிசாக மேலும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்து ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அகவிலைப்படி உயர்வு கிடைத்தால் அடிப்படை ஊதியம் உயரும்.