தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசி – அமைச்சார் முக்கிய அறிவுப்பு!
தமிழ்நாட்டில் ஓமைக்ரான் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் இன்று 16-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் கலந்து கொண்ட மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பணி தீவிரம்
தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்று கண்டறியபட்டதை தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஓமைக்ரான் தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து இன்று 16-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாம் மூலம் சென்னையில் 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தீர்மானித்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் 1600 தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.
டிச.28 முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு திடீர் அறிவிப்பு!
இம்முகாமில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அதில் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, “கர்ப்பிணிகளுக்கு அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடமாக திகழ்கிறது” என்றார். மேலும் 80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் இதுவரை தமிழகத்தில் 8.14 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இதில் 84.87% பேர் முதல் தவணை தடுப்பூசியும் 55.85% பேர் 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
‘இது’ நடந்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு விளக்கம்! பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்று பாதித்த 34 பேரில் 12 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மற்ற 22 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் 60 வயது மேற்பட்டடோருக்கு வருகிற ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15-18 வயது வரையிலான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி முதல் முன்களபணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.