டிச.28 முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு திடீர் அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் அதிகரித்து வரும் ஓமைக்ரான் தொற்று காரணமாக அங்கு வரும் டிசம்பர் 28ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு இரவு ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இரவு ஊரடங்கு உத்தரவு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து தினசரி எண்ணிக்கை விகிதம் நல்ல முறையில் சீரடைந்து வந்து கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களாக தொடர்ந்து திடீரென்று கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா தொற்றின் உருமாறிய ஓமைக்ரான் வகை வைரஸ் பரவல் கடந்த வாரத்தில் நாட்டில் உறுதி செய்யப்பட்ட நிலையிலும், ஆரம்ப நாட்களில் பரவல் என்பது இல்லை. ஆனால் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களில் ஓமைக்ரான் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
‘இது’ நடந்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு விளக்கம்! பொதுமக்கள் அதிர்ச்சி!
ஓமைக்ரான் வகை தொற்று அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக உள்ளது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதிக அளவில் சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகம் ஊக்குவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் பல மாநிலங்களிலும் இரவு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தபட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் 950 தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – உத்தரவு பிறப்பிப்பு!
நாட்டில் முதன் முதலில் ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்ட கர்நாடகா மாநிலத்தில் தற்போதைய பாதிப்புகள் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இதனால் மாநில முதல்வர் தொடர்ந்து கட்டுப்பாடுகளை அறிவிப்பது குறித்து மாநில உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார துறையினருடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில், டிசம்பர் 28 முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.