‘இது’ நடந்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு விளக்கம்! பொதுமக்கள் அதிர்ச்சி!
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் தேவை தினசரி 800 மெட்ரிக் டன்னை எட்டும் போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு:
இந்தியாவில் கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று தீவிரமெடுத்து வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 236 பேருக்கு ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்தே மக்கள் மீண்டு வர முடியாத நிலையில் உள்ளனர். இந்த நேரத்தில் அடுத்த தாக்குதலாக பரவி வரும் ஓமைக்ரான் தொற்று அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து மஹாராஷ்டிராவில் ஓமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் 100க்கும் மேற்பட்டோர் ஓமைக்ரான் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் 950 தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – உத்தரவு பிறப்பிப்பு!
இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விழாக்காலங்களில் பேரணி, ஊர்வலங்கள், வாணவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டுப்பாடாக அனைத்து விழாக்களில் 50% பேர் மட்டுமே பங்கு பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – அமைச்சர் சக்கரபாணி ஆய்வு!
அதன்படி அம்மாநிலத்தில் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை பொது மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது நோய் பரவல் நிலையை கருத்தில் கொண்டு மக்கள் அரசின் நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகளுக்கு தினசரி மருத்துவ ஆக்சிஜன் தேவை 800 மெட்ரிக் டன் தேவைப்படும் போது மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.