தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – அமைச்சர் சக்கரபாணி ஆய்வு!
தமிழகத்தில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பரிசு பொருட்களை தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க உள்ளது. இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசு
தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பரிசு பொருட்களை ஆண்டுதோறும் தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கி வருகிறது. அதையடுத்து தமிழகத்தில் வருகிற ஜனவரி 14 முதல் 17 வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. நடப்பாண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க உள்ளது.
TNPSC காலிப்பணியிடங்கள், மாதம் ரூ.1,19,500 சம்பளம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு 20 வகையான பரிசு பொருட்கள் கொண்டது என்று கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த தொகுப்பில் அரிசி, வெல்லம், முந்திரி, பாசிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், மஞ்சள் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, புளி, பருப்பு, ரவை, கோதுமை போன்ற 20 வகையான பொருட்கள் உள்ளது. இந்த பரிசு பொருளுடன் ஒரு முழு கரும்பும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அத்துடன் பரிசு பொருட்களை வழங்கும் பணிகளை தொடங்கியுள்ளது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்துக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வரத் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடல் – மருத்துவர்கள் சங்கம் முக்கிய கோரிக்கை!
திண்டுக்கல்லில் இந்த பரிசு தொகுப்பு சுமார் 6 லட்சத்து 64 ஆயிரத்து 970 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பரிசு பொருட்கள் அனைத்தும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து வரவழைக்கப்பட்டது. தற்போது ஒட்டன்சத்திரம் கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு இந்த பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அப்போது பொருட்களின் தரம் மற்றும் எடையளவு பற்றி உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் இந்த பரிசு தொகுப்புகளை விரைவாக ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.