தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் 950 தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – உத்தரவு பிறப்பிப்பு!

0
தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் 950 தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - உத்தரவு பிறப்பிப்பு!
தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் 950 தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - உத்தரவு பிறப்பிப்பு!
தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் 950 தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – உத்தரவு பிறப்பிப்பு!

அரசு மேல்நிலைப் பள்ளி நிலை பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு பட்டியலும் தயாரிக்கப்படவுள்ளன.

காலிப்பணியிடம்:

தமிழகத்தில் கொரோனா பரவலால் ஓராண்டிற்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலமும் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் கற்பித்தல் மற்றும் நிர்வாக பணிகளில் தாமதம் நிலவுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் இல்லாதால் ஆசிரியர்களே நிர்வாக பணிகளையும் செய்கின்றனர். அதனால் கற்பித்தல் பணிகள் முடங்கி விடுகிறது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – அமைச்சர் சக்கரபாணி ஆய்வு!

ஏற்கனவே வெகு நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயாராக்க வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிகள் வழங்கப்பட்டதால் சுமை அதிகரித்துள்ளது. அதனால் அரசு மேல்நிலை பள்ளிகளில் 950-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனையடுத்து ஆசிரியர் பணியிடம் குறித்து நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இம்மாதத்தில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

TNPSC காலிப்பணியிடங்கள், மாதம் ரூ.1,19,500 சம்பளம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதனால் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் 6,177 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 950 க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகார்களில் சிக்கி ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான ஆசிரியர்களை பரிந்துரைக்க கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!