தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம்!
தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
வேலை நிறுத்தம்:
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. அதனால் ஏராளமான அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். அனைத்து துறையினருக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை போல ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழக அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இதனை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். கடந்த வருடம் நிலவிய ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் ரேஷன் கடை ஊழியர்கள் முக்கிய பங்கு வகித்தனர். மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்ட போது ஆட்கள் பற்றாக்குறை நிலவிய போது இரவு பகல் பாராது குறுகிய நாளில் பொருட்களை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கினர். இத்தகைய சூழலில் அரசு இவர்களின் நாளை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் ரேஷனுக்கு தனித்துறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 7 முதல் 9 வரை மூன்று நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளனர். மூன்று நாட்கள் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ரேஷன் பொருட்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் அவதிக்கு உள்ளாகுவர்.