இந்தியாவில் 2,877 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் கட்டமைப்பு – மத்திய அரசு ஒப்புதல்!
தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மத்திய அரசு இதற்காக புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்கள்:
மாறிவரும் காலநிலை மற்றும் பருவ மாறுபாடுகள் காரணமாக தற்போது உலகில் உள்ள வளங்கள் அனைத்தும் பாழடைந்து வருகிறது. வரும் தலைமுறையினருக்கு குடிநீர் இருக்குமா என்பதே சந்தேகமாகி விட்டது. அந்த அளவிற்கு சுற்றுச்சூழல் மோசமடைந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எரிபொருள் சேமிப்பு குறித்த விழிப்புணர்வுகள் வெளியாகி வந்தாலும், மக்கள் இன்னும் அதன் தாக்கத்தை உணராமல் உள்ளனர்.
சென்னையில் பிரமாண்டமாக வர இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் – ஆச்சரியமூட்டும் சிறப்பம்சங்கள்!!
Exams Daily Mobile App Download
இதனால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை கணித்து எலெக்ட்ரிக் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு அதிகரித்து உள்ளது. இந்நிலையில், மத்திய கனரக தொழில்துறை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 68 நகரங்களில் 2,877 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையத்தின் கட்டமைப்பு ரூ.1,000 கோடி நிதியில் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.