சென்னையில் பிரமாண்டமாக வர இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் – ஆச்சரியமூட்டும் சிறப்பம்சங்கள்!!
சென்னையில் மெட்ரோ ரயிலின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 2ம் கட்ட திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு வகையான சிறப்பசம்கள் உள்ளன. இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.
மெட்ரோ ரயில்:
சென்னையில் மக்கள் தொகை அதிகம் இருப்பதால் பொது போக்குவரத்துகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் விரைவாகவும் விலை குறைவாகவும் இருக்கும் மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் அதிகம் பயணித்து வருகின்றனர். அதனால் மெட்ரோ ரயில் திட்டத்தை பல்வேறு இடங்களில் அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி தற்போது 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று வெவ்வேறு வழித்தடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 48 ரயில் நிலையங்கள் பூமிக்கு அடியில் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் அனைத்து பகுதிகளுக்கும் விரைவாக செல்ல முடியும். அத்துடன் திருமயிலை, பட்டாளம், ஆழ்வார்பேட்டை, கச்சேரி சாலை, பாரதிதாசன் சாலை ஆகியவற்றில் அடுக்கடுக்கான சுரங்க பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Google Pay UPI பரிவர்த்தனையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய அம்சம் – இனி உஷாரா இருக்கலாம்!
Exams Daily Mobile App Download
இதில் திருமயிலை ரயில் நிலையத்தில் 35 மீட்டர் ஆழம் கொண்ட 4 சுரங்க பாதைகள் அமைக்கப்பட உள்ளது. இதையடுத்து கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4வது வழித்தட மெட்ரோ ரயில் நிலையம் 24 மீட்டர் ஆழம் கொண்ட சுரங்கப் பாதையில் அமைக்கப்பட உள்ளது.