ரயில்களில் பயணச்சீட்டு இன்றி 27 லட்சம் பேர் பயணம் – மத்திய ரயில்வே நிர்வாகம்!!
கடந்த நிதியாண்டில் நாடு முழுவதும் ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் 27 லட்சம் பேர் பயணம் செய்ததாக மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் மூலம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத தொகையையும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரயில்வே அறிவிப்பு:
தகவல் உரிமை சட்டம் மூலம் அரசின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் விவரங்களை அறிய முடியும். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் உரிமை சட்டம் மூலம் நாட்டில் ரயில்வேயில் வசூலாகியுள்ள அபராத தொகை குறித்த கேள்விகளை கேட்டு மனு அனுப்பியுள்ளார். இதற்கு ரயில்வே வாரியம் பதில் அளித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக, கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் நாடு முழுவதும் 27.57 லட்சம் பேர் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்காக இதுவரை ரூ.143.82 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இருப்பினும், கடந்த 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் ரூ.561.73 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் தெய்வமகள் காயத்ரி – அதுவும் இந்த பிரபல சேனலிலா??
இந்த காலத்தில் 1.10 கோடி பேர் பயணச்சீட்டு இல்லாமல் பிடிபட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தது. இதனால் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.