புதிய வாகனம் வாங்குபவர்களுக்கு சாலை வரியில் 25% தள்ளுபடி – ஒன்றிய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் பழைய வாகனத்தை அழித்து விட்டு புதிய வாகனம் வாங்குபவர்களுக்கு சாலை வரியில் 25 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாலை வரியில் தள்ளுபடி:
இந்தியாவில் அதிக ஆண்டுகள் வாகனங்களை பயன்படுத்தும் போது அதன் உதிரி பாகங்கள் பழுதடைந்து விடுகிறது. இதனை சரி செய்யா விட்டால் வாகனத்தை ஓட்டும் போது அதிகளவு புகை வெளிப்படுகிறது. 10, 15 ஆண்டுகள் பயன்படுத்திய வாகனங்களில் உதிரி பாகங்களை மாற்றினாலும் வாகனம் சீரற்ற தன்மையை இழந்து விடுகிறது. அதனால் வெளியாகும் புகை காற்றில் கலந்து காற்றை மாசடைய செய்கிறது. இதனால் சுற்றுச்சூழலும் பாதிப்படைகிறது. இதனை தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய தேசிய ஆட்டோமொபைல் ஸ்கிராப்பேஜ் கொள்கையை கொண்டு வந்தது.
தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வாஷிங் மெஷின் பரிசு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அதன்படி 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் தனிநபர் பயன்படுத்த கூடிய வாகனங்களும் 15 ஆண்டுகளுக்கு மேலான வணிக தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களையும் தகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட உத்தரவிடப்பட்டது. இந்த சோதனைக்கு பின் வாகனங்களின் தன்மை அறியப்படுகிறது. இவை மிகவும் மோசமான நிலையில் இருந்தால் அவை சுற்றுச்சூழல் சீர்கேட்டை உருவாக்கும் என்பதால் வாகனங்களை அழிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கிராப்பிங் மையத்தில் வாகனத்தை அழித்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக நீட்டிப்பு, நடப்பு நிதியாண்டில் GDP வளர்ச்சி 9.5% – RBI கணிப்பு!
இவ்வாறு பழைய வாகனத்தை சோதனைக்கு உட்படுத்தி அழித்து விட்டு புதிய வாகனம் வாங்கும் தனி நபர்களுக்கு சாலை வரியில் 25 சதவீதமும், வர்த்தக பயன்பாட்டு வாகனங்களுக்கு 15 சதவீதம் வரையிலும் சலுகை அளிக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த சலுகைகள் தனிநபர் வாகனங்களுக்கு 15 ஆண்டுகள் வரையும், வர்த்தக வாகனங்களுக்கு 8 ஆண்டுகள் வரையும் கிடைக்கும். இந்த திட்டம் வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.