தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வாஷிங் மெஷின் பரிசு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வாஷிங் மெஷின் பரிசு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வாஷிங் மெஷின் பரிசு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வாஷிங் மெஷின் பரிசு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களை ஊக்குவிக்கவும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குழுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

கொரோனா தாக்கம் தீவிரமாக பரவி வந்த நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையை தொடர்ந்து 3ம் அலை பரவும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. எனவே நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக மாற்ற கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார்.

ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக நீட்டிப்பு, நடப்பு நிதியாண்டில் GDP வளர்ச்சி 9.5% – RBI கணிப்பு!

கரூர் மாவட்டத்தில் வரும் 10ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களில் மாவட்ட அளவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு முதல் பரிசாக துணி துவைக்கும் இயந்திரமும் (வாஷிங் மிஷின்), 2ம் பரிசாக கிரைண்டர், 3ம் பரிசாக மிக்ஸியும், 4ம் பரிசாக 25 நபர்களுக்கு குக்கர் மற்றும் ஆறுதல் பரிசாக 100 பேருக்கு பாத்திரங்களும் வழங்கப்படவுள்ளது.

மிலாடி நபி கொண்டாடும் நாள் – தமிழக தலைமை காஜி அறிவிப்பு!

25க்கும் மேற்பட்ட நபர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாமிற்கு அழைத்து வந்தால் அவருடைய பெயரும் குலுக்கலில் சேர்க்கப்படும் எனவும், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கணக்கெடுப்பின்போதே பரிசுகள் குறித்த விபரம் அடங்கிய டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். தடுப்பூசி செலுத்தப்படும் அன்று அந்த டோக்கன்களுடன் வருகை தர அறிவுறுத்த வேண்டும் எனவும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி கொண்ட மாவட்டமாக கரூர் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!