சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை செயலர் தகவல்!

0
சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை செயலர் தகவல்!
சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை செயலர் தகவல்!
சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை செயலர் தகவல்!

சென்னை ஐஐடியை சேர்ந்த 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை தற்போது 55 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று

நாடு முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை வேகமெடுத்து வரும் நிலையில் இது 4ம் அலைக்கான ஆரம்பம் என்று மக்கள் பீதியடையத் துவங்கியுள்ளனர். இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் உருவான கொரோனா பேரலைத்தொற்று முழு நாட்டையும் முடக்கி போட, மக்கள் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலை உருவானது. இந்த நோய்த்தாக்கம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக காணப்பட்டு வரும் நிலையில் மக்கள் உண்மையில் கொரோனாவுடன் வாழப்பழகி விட்டனர்.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா? தீவிரமாகும் கட்டுப்பாடுகள்! பொதுமக்கள் அச்சம்!

இந்த சூழலில் கடந்த ஒரு சில மாதமாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வந்ததை கருத்தில் கொண்டு கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளாகவே மீண்டுமாக கொரோனா புதிய பாதிப்புகள் தீவிரமடையத் துவங்கி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் நேற்று (ஏப்ரல்,22) ஒரே நாளில் 2,451 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 4,30,52,425 ஆக உயர்ந்துள்ளது. இது 4ம் அலைக்கான ஆரம்பமாக இருக்குமோ என்று மக்கள் மீண்டும் அச்சப்படத் துவங்கியுள்ளனர்.

ExamsDaily Mobile App Download

தமிழகத்திலும் கூட கொரோனா பாதிப்புகள் புதிதாக பதிவாகி வருவதால் மக்கள் பொது இடங்களில் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னதாக சென்னை ஐஐடி மாணவர்கள் 30 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதியாகி இருக்கும் நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது 55 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். அதாவது, ஐஐடியை சேர்ந்த 1420 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!