தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா? தீவிரமாகும் கட்டுப்பாடுகள்! பொதுமக்கள் அச்சம்!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் மக்கள் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை கடைபிடிக்க மறந்துள்ளனர். அதனால் தற்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
மீண்டும் ஊரடங்கு அமல்
கொரோனாவின் பிடியில் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அரசின் துரித நடவடிக்கையாலும், தடுப்பூசி செலுத்தி கொண்டதன் காரணமாக கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ளது. அதனால் அரசு பல தளர்வுகளை வழங்கி இருக்கிறது. பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின் திருவிழாக்கள் நடந்தது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு!
பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை மறந்து லட்சக்கணக்கில் வந்து பங்கேற்றனர். அதன் காரணமாக கொரோனா பரவல் மீண்டும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனாவால் 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அணியாமல் இருப்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ExamsDaily Mobile App Download
தமிழகத்தில் கொரோனா நான்காம் அலை பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதனால் வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் கூட இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.