2023 பொங்கல் பரிசு.. தமிழகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் – மாவட்ட வாரியாக விநியோகம்!
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக வழங்கும் இலவச வேஷ்டி சேலை உற்பத்தி பணிகள் முடிந்து அவற்றை மாவட்ட வாரியாக விநியோகம் செய்யும் வேலைகளை முடக்கிவிட்டுள்ளது.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்கி வரும் இலவச வேஷ்டி, சேலைகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டின் இருப்பை தவிர்த்து 2023 பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்கு 69,74,170 வேட்டிகளுக்கும் 62,39,673 இலவச சேலைகளுக்கும் ஆர்டர் அளிக்கப்பட்டது. இதற்கான உற்பத்தி பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டு, அதன்பிறகு அவற்றை மதிப்பீடு செய்து அரசு இந்த பணிகளை தொடங்கியது.
சென்னையில் 46-வது புத்தக கண்காட்சி.. ஜன 6ல் துவக்கம்.. முதல்வர் தொடக்கி வைப்பு!!
Exams Daily Mobile App Download
வேஷ்டி, சேலை தயாரிக்கும் பணிகள் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது. தற்போது இறுதி கட்ட உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அரசு அளிக்கும் விவரங்களின் படி மாவட்ட வாரியாக இலவச வேஷ்டி, சேலைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் பொங்கல் பரிசு தொகுப்போடு சேர்த்து ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். 10 ஆண்டுகளுக்கு பிறகு 15 டிசைன்களில் சேலைகளும், 5 விதமான பார்டர்கள் வேட்டிகளும் வரும் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.