சென்னையில் 46-வது புத்தக கண்காட்சி.. ஜன 6ல் துவக்கம்.. முதல்வர் தொடக்கி வைப்பு!!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வரும் 2023 ஜனவரி மாதம் 46-வது புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
புத்தக கண்காட்சி:
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில் எண்ணற்ற புத்தகங்கள் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்படும். இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர். மேலும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனையாகும். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஸ்மார்ட் போன் வாயிலாகவே நாம் கதைகளை வாசித்து வந்தாலும் புத்தகத்தை கையில் பிடித்து பக்கங்களை திருப்பி வாசிப்பது என்பது தனி அனுபவம் தான்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை – இத்தனை நாட்கள் Leave-ஆ.. ஹாப்பி நியூஸ்!
Exams Daily Mobile App Download
இதனை கருத்தில் கொண்டு புத்தக பிரியர்களுக்காகவே சென்னையில் 46-வது புத்தக கண்காட்சி 2023 ஜனவரி மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சி வரும் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை மொத்தம் 16 நாட்களுக்கு நடைபெறும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கண்காட்சியானது சென்னை நந்தவனத்தில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெறும். அத்துடன் கண்காட்சியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.