JEE 2023 நுழைவுத்தேர்வு.. தமிழக மாணவர்களுக்கு எழுந்த சிக்கல் – 10 லட்சம் பேர் தவிப்பு!
இந்தியாவில் மத்திய அரசால் நடத்தப்படும் JEE தேர்வுக்கு கடந்த 15ம் தேதி முதல் விண்ணப்பபதிவு தொடங்கியது. இந்த நிலையில் தமிழக மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
JEE தேர்வு:
இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, என்ஐடி, பி.இ உள்ளிட்ட படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை (NTA) JEE எனும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான JEE நுழைவு தேர்வுக்கான விண்ணப்பபதிவு தற்போது ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்த விண்ணப்பபதிவு செயல்முறை கடந்த 15ம் தேதி முதல் தொடங்கியது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது JEE நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது 10ம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் Grade குறித்த விவரங்கள் கேட்கப்படுகிறது. இந்த விவரங்களை நிரப்பினால் மட்டுமே அடுத்தடுத்த விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும்.
இனி இலவசம் கிடையாது.. Facebook, இன்ஸ்டாவுக்கு நோ சொன்ன ட்விட்டர் – எலான் மஸ்கின் அடுத்த செக்!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கடந்த 2020 – 2021ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்களால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. ஏனெனில் 2020 – 2021ம் ஆண்டில் கொரோனா பேரிடர் காரணமாக தமிழகத்தில் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் இவர்களுடைய 10ம் வகுப்பு சான்றிதழில் ‘ஆல் பாஸ்’ என்பது மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும், மதிப்பெண்கள் விவரம் இருக்காது. அதனால் மதிப்பெண் விவரத்தை நிரப்ப முடியாமல் சுமார் 10 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.