2022 இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் – அறிவிப்பு வெளியீடு!
அக்டோபர் 3ம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசுகளின் வரிசையில் அக்டோபர் 6ம் தேதியான இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நோபல் பரிசு 2022:
அக்டோபர் மாத முதல் வாரத்தில் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வரும் நோபல் பரிசுகள் நடப்பாண்டில் அக்டோபர் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய 6 பிரிவுகளில் சிறப்பான சேவைகளை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.
நடப்பாண்டில் இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல் பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வென்றவர்கள் முறையே அக்டோபர் 3 ம் தேதி முதல் நேற்று வரை அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அக்டோபர் 7ம் தேதியான நாளை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் எல்கேஜி, யூகேஜி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!
Exams Daily Mobile App Download
நடப்பாண்டில் அமைதிக்கான பரிசை யார் வெல்வார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், அக்டோபர் 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. அக்டோபர் 6ம் தேதியான இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அனி எர்னாக்ஸ் என்பவர் வென்றுள்ளார். எல் அகுபேஷன் (L’occupation) என்ற புத்தகத்தை எழுதியதற்காக எழுத்தாளர் அனி எர்னாக்ஸ்-க்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்