தமிழகத்தில் எல்கேஜி, யூகேஜி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

0
தமிழகத்தில் எல்கேஜி, யூகேஜி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் எல்கேஜி, யூகேஜி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!தமிழகத்தில் எல்கேஜி, யூகேஜி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் எல்கேஜி, யூகேஜி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

தமிழகம் முழுவதும் 2,381 மையங்களில் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தற்போது தொகுப்பூதியத்தில் இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தொகுப்பூதியம்

தமிழகத்தில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது. தமிழகம் முழுவதும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் 2,381 அங்கன்வாடி கட்டடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. அதன்படி தமிழக அரசு இந்த உத்தரவை திரும்ப பெற்றது. இதனையடுத்து மீண்டும் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடைபெற்றது.

ஆனால் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ஏற்கனவே பணியாற்றிய இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் மீண்டும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஏனெனில் கொரோனா பரவலுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மத்தியில் கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதனால் இதனை சரி செய்ய தமிழக அரசு “எண்ணும் எழுத்தும்” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனால் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்தது.

இந்திய ஐடி துறை ஊழியர்களுக்கு நேர்ந்த அவல நிலை – கேள்விக்குறியாகும் பணி வாய்ப்பு!

Exams Daily Mobile App Download

அதன்படி,2,381 அங்கன்வாடி மையங்களில் 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. இந்த நிலையில் தற்போது பணி புரிந்து வரும் சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்துள்ளதாவது, தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ரூ.5000 தொகுப்பூதியமாக வழங்க அனுமதி அளித்துள்ளது. அத்துடன் இவர்கள் ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!