அரசு பள்ளிகளில் 20,000 ஆசிரியர்களை பணியமர்த்த திட்டம் – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 20,000 இளநிலை ஆசிரியர்கள் பணியர்த்த இருப்பதாகவும், விருப்பமுள்ளவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை ஆசிரியர்:
ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்தான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 20,000 இளநிலை ஆசிரியர்களை பணியமர்த்த இருப்பதாக பள்ளிக் கல்வித் திட்ட ஆணையம் புதிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், விருப்பமும், தகுதியும் பெற்றவர்கள் நாளை முதல் அக்டோபர் 10ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிபிடி தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் திறமையான ஆசிரியர்கள் தேர்வு செய்ய படுவார்கள். இதனையடுத்து, தேர்வுக்கான தேதி, நேரம், தேர்வு மையம் ஆகிய அனைத்து விவரங்களையும் விண்ணப்பதாரர்கள் osepa.odisha.gov.in என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். மேலும், சிபிடி தேர்விற்கான பாடத்திட்டமும் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் திட்ட ஆணையம் அறிவித்துள்ளது.