மத்திய அரசின் PM KISAN திட்ட பயனாளிகளுக்கு ரூ.2000 தவணைத்தொகை – மே 31 அன்று வெளியீடு!
பிரதம மந்திரியின் கிஷான் திட்டத்தின் 11வது தவணைப்பணம் வரும் 31ம் தேதி அன்று வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வு பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நடைபெற உள்ளது.
நிதி உதவி
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-Kisan) திட்டத்தின் 11வது தவணைப்பணம் மே மாதம் 31ம் தேதியன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, நாடு முழுவதும் உள்ள நலிவடைந்த விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-Kisan) என்ற திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் ரூ.6000 பணத்தை நிதியுதவியாக வழங்கி வருகிறது. அதன் கீழ், விவசாயிகளுக்கு ஒவ்வொரு தவணைக்கும் ரூ.2000 நிதி உதவி கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் கடைசியாக 10வது தவணைப் பணம் ஜனவரி 1, 2022 அன்று வெளியிடப்பட்டது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – இதனை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்!
இப்போது பிரதமர் நரேந்திர மோடி, மே 31ம் தேதியன்று பிரதமர்-கிசான் சம்மன் நிதியின் 11வது தவணைப் பணத்தை இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறும் மத்திய அமைச்சகங்களின் மெகா நிகழ்வான “கரிப் கல்யாண்” சம்மேளனத்தில் வெளியிட இருக்கிறார். அந்த வகையில் இந்த முறை ரூ.20,000 கோடி மதிப்பிலான பணம் சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நிகழ்ச்சிகளில் மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கலந்து கொள்ள இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இது தவிர இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பிரதான் மந்திரி கிஷான் உள்ளிட்ட மத்திய திட்டங்களால் பயனாளிகளின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து கலந்துரையாட இருக்கிறார். அந்த வகையில் கிசான் சம்மன் நிதி, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, போஷன் அபியான், பிரதான் மந்திரி மாத்ரி வந்தனா யோஜனா, ஸ்வச் பாரத் மிஷன், ஜல் ஜீவன் மிஷன் மற்றும் அம்ருத், பிரதான் மந்திரி ஸ்வானிதி யோஜனா போன்ற 16 திட்டங்கள், 9 மத்திய அமைச்சகங்களால் நடத்தப்படும் திட்டங்கள் மற்றும் துறைகளின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடவும் உள்ளார்