மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் – 20 முதல் 25% வரை மதுபானங்களின் விலை உயர்வு!
பண்டிகை காலங்கள், வார விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மதுபானப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தெலுங்கானா அரசு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வருவாயை அதிகரிக்கும் நோக்கில் தெலங்கானாவில் மதுபானங்களின் விலையை 20 முதல் 25 % வரை அம்மாநில அரசு உயர்த்தியுள்ளது.
விலை உயர்வு:
மதுபானங்களின் விலை, கடைசியாக கொரோனா பாதிப்பு ஏற்படும் முன்பு 2020ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மதுபானங்களின் விலை ஒரு சில மாநிலங்களில் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. அதாவது மதுபானக் கடைகளில் குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு 10 ரூபாய், மீடியம் மற்றும் உயர்ரக மதுபானங்களுக்கு 20 ரூபாய், ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண மதுபான ரகங்களுக்கு 20 ரூபாய், மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 40 ரூபாய் என உயர்த்தப்பட்டது.
SSC Tier 1 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அந்த வரிசையில் தற்போது தெலங்கானா அரசும் மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதன்படி, அனைத்து பிராண்டு மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. குவார்ட்டர் பாட்டிலின் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து வகை பீர்களும், குறைந்தபட்சம் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. மேலும் மதுபானங்களில் புதிய விலை பட்டியல் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த மதுபானங்களின் விலை உயர்வால், தெலுங்கானா அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 கோடி முதல் ரூ.7,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் 2021-22 ல் மதுபான விற்பனை மூலம் ரூ.30,000 கோடி வருமானம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. அதன் வரி வருமானம் ரூ.12,000 கோடியாக இருந்தது. தற்போது 1,000 மில்லி மதுபானத்தின் விலை ரூ.120 உயர்ந்து, ரூ.495ல் இருந்து ரூ.615 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வின் மூலம் குவாட்டர் ஒன்றுக்கு ரூ.20 அதிகமாகும் என்பதால், மதுப்பிரியர்கள் அதிக அதிர்ச்சியடைந்துள்ளனர்.