தமிழக அரசு அறிவித்த ரூ.20,000 ஊதிய உயர்வு – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் 2,423 சுழற்சி – 1 பாடப்பிரிவுகளை நடத்தும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியம் 15 ஆயிரத்தில் இருந்து 20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் பொது அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள் ஏதும் இடம் பெறாததால் ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர்.
Reliance Jio வெளியிட்ட ஷாக் அறிவிப்பு – 5 ப்ரீபெய்ட் திட்டங்கள் மீது திடீர் விலை உயர்வு!
இந்த நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளித்தது. இதையடுத்து தமிழக அரசும் ஊழியர்களுக்கு 2022ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகை மற்றும் கருணை தொகையும் வழங்கப்பட்டது. அரசு ஊழியர்களை தொடர்ந்து தற்போது அரசு அறிவியல் கலை கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் 2022 அறிவிப்பு – புதிய விதிமுறைகள் வெளியீடு!
அதன் படி 2020-2021 ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், சுழற்சி-1 பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு 2423 கெளரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.15,000 வீதம் ஏப்ரல் 2020, ஜூன் 2020 முதல் அக்டோபர் 2020 வரை 6 மாதங்களுக்கும் மற்றும் நவம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை 5 மாதங்களுக்கும், ஆக மொத்தம் 11 மாதங்களுக்கு முறையே தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்த பட்டனர். இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர தொகுப்பூதியம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 1.01.2020 முதல் இந்த தொகுப்பூதியத்தினை உயர்த்தி வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.