Post Office 5 வருட முடிவில் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ் – ஓய்வு பெற்றவர்களுக்கான சிறந்த திட்டம்!
மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை அஞ்சல் துறையில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
மூத்த குடிமக்கள் திட்டம்:
நாடு முழுவதும் பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை அஞ்சல் துறையில் தொடங்கி வருகின்றனர். இத்தகைய சேமிப்புகள் அனைத்தும் அவர்களது எதிர்கால தேவைக்கு உதவும் என்ற எண்ணத்தில் மட்டுமே தொடங்கப்பட்டு வருகிறது. அரசும் அனைவருக்கும் உகந்த வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு அஞ்சல் துறை மூலம் மூத்த குடிமக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறந்த சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதும் விரைவில் பள்ளிகள் திறப்பு? ஜனவரி 20ம் தேதி அரசு ஆலோசனை!
இந்த மூத்த குடிமக்களுக்கான திட்டத்தில் ரூ.1000 முதல் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்தத்திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும் இந்த கணக்கை தொடர விரும்பினால் மீண்டும் 3 ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ளலாம். அதனால் இந்த திட்டம் மூத்த குடிமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தினை ஓய்வூதிய சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கை திறக்க வேண்டும். இத்தகைய சேமிப்பு திட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பாதுகாப்பு பணியில் இருக்கும் அனைவரும் கணக்கை தொடலாம்.
ITI தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ஜன.31 வரை விடுமுறை – கொரோனா பரவல் எதிரொலி!
இந்த மூத்த குடிமக்கள் திட்டத்தில் ரூ.15 லட்சம் சேமிப்பதன் மூலம் 5 வருட முடிவில் ரூ.20 லட்சம் வரை ரிட்டன்ஸ் பெற முடியும். 15 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்தால் சேமிப்பு கணக்குக்கு கிடைக்கும் சாதாரண வட்டி விகிதம் கிடைக்கும். தற்போது இந்த திட்டத்திற்கு 7.40% வழங்கப்பட்டு வருகிறது. இந்த கணக்கை தொடர்ந்தவர்கள் இடையில் முடித்துக் கொள்ளவும் முடியும். ஆனால் அவ்வாறு முடிப்பதற்கு கணக்கு தொடர்ந்து 1 வருடம் முடிந்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் ரூ.50,000க்கு மேல் வட்டி வருவாய் இருந்தால் TDS பிடித்தம் செய்யப்படும். இதில் விலக்கு பெற 15h அல்லது 15g படிவத்தை பூர்த்தி செய்யலாம்.