ITI தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ஜன.31 வரை விடுமுறை – கொரோனா பரவல் எதிரொலி!

0
ITI தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ஜன.31 வரை விடுமுறை - கொரோனா பரவல் எதிரொலி!
ITI தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ஜன.31 வரை விடுமுறை - கொரோனா பரவல் எதிரொலி!
ITI தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ஜன.31 வரை விடுமுறை – கொரோனா பரவல் எதிரொலி!

புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளை தொடர்ந்து ஜனவரி 31ம் தேதி வரை தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை:

இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா மூன்றாம் அலை பரவ தொடங்கி விட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது தடுப்பூசிகள் ஓரளவு முழுமையாக செலுத்தப்பட்டிருப்பதால் நோயின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் டெல்டாவை போல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு? மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!

அதனால் நோய் பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மற்ற யூனியன் பிரதேசங்களை தொடர்ந்து தமிழகத்தை ஒட்டியுள்ள புதுவையிலும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 1500 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த புதுவை அரசு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

TCS, Infosys, Wipro நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – தகவல் வெளியீடு!

அந்த வகையில் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க அரசு ஊழியர்கள் 50% வீட்டிலிருந்து பணி புரியவும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்பவர்கள் அலுவலகங்களுக்கு வருவதில் இருந்து விலக்கும் அளித்துள்ளது. கட்டாயம் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வலியுறுத்தி வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது புதுவையில் உள்ள அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!