மாநிலம் முழுவதும் விரைவில் பள்ளிகள் திறப்பு? ஜனவரி 20ம் தேதி அரசு ஆலோசனை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பேரலை தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் அரசு முடிவு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பள்ளிகள் திறப்பு
மாநிலம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வழக்குகளின் தொற்று அதிகரித்து வருவதையடுத்து மகாராஷ்டிரா பள்ளிகள் அனைத்தும் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக முழுமையாக மூடப்பட்டது. இதற்கிடையில் தற்போது கொரோனா தொற்றின் தினசரி பாதிப்புகள் குறைந்து வருவதை முன்னிட்டு பள்ளிகளை மீண்டுமாக திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா அரசு, நாளை மறுநாள் அதாவது ஜனவரி 20ம் தேதியன்று நடத்தப்பட இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓமைக்ரான் பரவல் அதிகரிக்கும் போதிலும் ஊரடங்கு கிடையாது – அரசு அறிக்கை!
தற்போதைய நிலவரப்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 31, 2022 வரை பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், மாநில அரசின் பிரதிநிதி ஒருவர் மகாராஷ்டிரா பள்ளிகள் ஜனவரி 31 வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும், பலிகளை மீண்டும் திறப்பது குறித்த முடிவு அதன் பின்னரே பரிசீலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் மகாராஷ்டிரா அரசு, பள்ளியை மூடுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று பெற்றோர் குழுக்கள் மற்றும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ITI தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ஜன.31 வரை விடுமுறை – கொரோனா பரவல் எதிரொலி!
குறிப்பாக மும்பையில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று சில பெற்றோர்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இப்போது மாணவர்களின் எதிர்கால கல்வி மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு ஜனவரி 20 தேதியன்று நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது என சொல்லப்பட்டுள்ளது.