ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி – தீபாவளி பரிசு அறிவிப்பு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 கிலோ சர்க்கரையுடன் 10 கிலோ அரிசி பரிசாக வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பரிசு
வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நேற்று (அக்.25) அரசு ஊழியர்களுக்கான இந்த ஆண்டு தீபாவளி போனஸ் உதவித்தொகை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி!
அதன் கீழ் புதுச்சேரி அரசுத்துறையில் பணிபுரியும் C மற்றும் B பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.6,908 மற்றும் முழுநேரம் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,184 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பரிசாக இலவச ரேஷன் பொருட்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
இது தொடர்பாக புதுச்சேரி அரசு செயலர் உதயகுமார் கூட்டுறவுத்துறை பதிவாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘வருகின்ற தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ சர்க்கரையுடன் 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் பண்டிகை காலம் வரை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்குவதை கூட்டுறவுத்துறை உறுதி செய்ய வேண்டும். மேலும் ரேஷன் கடைகளின் பட்டியல் விவரத்தை இன்னும் இரண்டு நாட்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.