சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி!
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையானது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை:
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து தங்கம் போன்று விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் வெவ்வேறு பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் விலையானது வேறுபட்டு காணப்படுகிறது. இந்த பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு நாளும் இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் மற்றும் பாரத் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றது. அந்த வகையில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலையானது அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தற்போது கடந்த இரண்டு தினங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
ஆனாலும் இவ்வாறு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்ததற்கு காரணம் நாளுக்கு நாள் அதன் தேவை அதிகரிப்பது தான். இந்நிலையில் சென்னையில் கடந்த அக்.24ம் தேதி 1 லிட்டர் பெட்ரோல் 104.52 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 1 லிட்டர் டீசல் 100.59 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 320 வன பாதுகாவலர் காலிப்பணியிடங்கள் – காத்திருப்போர் பட்டியல் வெளியீடு!
இவ்வாறு பண்டிகை நேரத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த பெட்ரோல், டீசல் விலையானது எந்த வித மாற்றமும் இல்லாமல் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு சற்று நிம்மதி அளித்து வருகிறது. இருந்தாலும் பெட்ரோல், டீசல் இரண்டுமே கிட்டத்தட்ட ஒரு விலையில் அதாவது 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த விலை குறைந்தால் நன்றாக இருக்கும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.