சமையல் போட்டி பற்றி சொல்லும் சந்தியா, முடியாது என மறுக்கும் சரவணன் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியா சரவணனை ரூமில் இருந்ததற்காக சிவகாமி திட்ட, சந்தியா சமையல் போட்டி பற்றி சொல்கிறார். உடனே சரவணனால் பண்ண முடியாது என அனைவரும் சொல்ல, சரவணன் முடியாது போல என சொல்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியா பிறந்தநாள் விழாவில் ரூமிற்குள் சென்றதற்கு சிவகாமி பயங்கரமாக திட்டுகிறார். காலையில் இருந்து அவன் பின்னாடி நீ சுற்றியதை நான் பார்த்தேன் என சிவகாமி சொல்ல, இதான் நீ படித்த லட்சணமா என கேட்கிறார். உடனே சந்தியா கோவப்பட்டு நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள் என சொல்ல, சிவகாமி மற்றும் சரவணன் அதிர்ச்சி அடைகிறார். உடனே அர்ச்சனா என்ன என் அத்தையை எதிர்த்து பேசுகிறாய் என சொல்ல, செந்தில் அவரை அமைதியாக இருக்க சொல்கிறார்.
பின் சந்தியா சமையல் போட்டி ஒன்று சென்னையில் நடக்கிறது. அதில் கலந்துகொள்ள வேண்டும் அதில் இவர் வெற்றி பெற்றால் இந்த தென்காசி முழுவதும் இவருடைய புகழ் தான் பறக்கும் அதை பற்றி பேச தான் நான் ரூமிற்குள் சென்றேன் என சொல்ல, சிவகாமி இந்த வீட்டில் சொல்ல இடமில்லையா எல்லார் முன்னாடியும் சென்று இந்த விளக்கத்தை சொல்ல முடியுமா போன இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரியாதா என கேட்கிறார்.
உடனே ஆதி இது தான் சந்தியா அண்ணி சொன்ன சமையல் போட்டி பாருங்க எல்லாரும் வெளிநாட்டுகாரர்கள் தான் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சரவணன் அண்ணனிற்கு பூந்தி தான் போட தெரியும் என கிண்டல் செய்கிறார். உடனே சரவணன் என்னால் முடியாது என சொல்ல, சந்தியா உங்களால் முடியும் என சொல்கிறார். ஆனால் சிவகாமி அவனுக்கு பிடிக்காததை செய்யாதீங்க என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். செந்தில் அர்ச்சனாவிடம் பொண்டாடி என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என சொல்ல அர்ச்சனா உடனே வந்துருவீங்களே என சொல்கிறார்.
சந்தியா ரூமில் கோவமாக இருக்க சரவணன் வந்து நீங்க கோவமாக இருப்பீங்க என எனக்கு தெரியும் ஆனால் என்னால் அந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது என சொல்கிறார். உடனே சந்தியா எனக்கும் தான் ஆங்கிலம் தெரியும் ஆனால் என்னால் சமைக்க முடியாது என சொல்ல, சரவணனை வெற்றி பெற்றால் வீட்டில் எல்லாரும் எப்படி சந்தோஷப்படுவார்கள் என நினைத்து பாருங்க என சொல்கிறார். உடனே சரவணன் நினைத்து பார்க்க அவருக்கு சந்தோசமாக இருக்கிறது.
உடனே சந்தியா என்ன தனியாக சிரிக்கிறீங்க என கேட்க, எங்கே என் கப்பு என கேட்கிறார். இதில் கலந்து கொண்டால் ரொம்ப நன்றாக இருக்கும் என சொல்ல, சரவணன் கலந்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார். பின் சந்தியா சரவணனிற்கு குட் மார்னிங் சொல்ல சொல்லிக்கொடுக்கிறார். சரவணன் சிவகாமியிடம் போட்டி பற்றி சீக்கரம் சொல்ல சொல்லி சந்தியா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.