தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கவனத்திற்கு – 2 தவணை தடுப்பூசி கட்டாயம்!

0
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கவனத்திற்கு - 2 தவணை தடுப்பூசி கட்டாயம்!
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கவனத்திற்கு - 2 தவணை தடுப்பூசி கட்டாயம்!
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கவனத்திற்கு – 2 தவணை தடுப்பூசி கட்டாயம்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தெடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

தடுப்பூசி கட்டாயம்:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவியதால் கொரோனா 2வது அலை உருவானது. இத்தகைய தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. அந்த வகையில் இதுவரை கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை நோக்கமாக கொண்டு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

டிச.31 முதல் ஜனவரி 1 வரை மதுபானம் விற்பனை செய்ய தடை – நீதிமன்றம் உத்தரவு!

அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்று வந்த தடுப்பூசி முகாம் தற்போது வேலை நாட்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறாக பல்வேறு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டாலும் பெரும்பாலானர் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைப்பு – மாநில அரசு அறிவிப்பு! இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

அதனால் கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாவட்ட குழு ஆய்வின் மூலம் தடுப்பூசி செலுத்தாதது தெரிய வந்தால் அவர்கள் விபரம் கிளை தகவல் பலகையில் அறிவிப்பாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் யார் யார் 2 தவணை தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என்பது குறித்து அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்குமாறு துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!