பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைப்பு – மாநில அரசு அறிவிப்பு! இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

0
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைப்பு - மாநில அரசு அறிவிப்பு! இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைப்பு - மாநில அரசு அறிவிப்பு! இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைப்பு – மாநில அரசு அறிவிப்பு! இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. தற்போது இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை ரூ.25 குறைத்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் ஜன.26ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை குறைப்பு:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில் இருந்தது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையானது ரூ.100 ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று பரவலில் இருந்து மக்கள் மீண்டு படிப்படியாக தங்களது இயல்பு வாழ்க்கைக்கு வந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டது, வாகன ஓட்டிகள் மத்தியில் மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி உதவித்தொகை! விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதனை தொடர்ந்து வாகன ஓட்டிகளின் நலன் கருதி மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைத்து அமல்படுத்தியது. அந்த வகையில் பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.5, டீசலுக்கான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை குறைவானது வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அன்று முதல் இன்று வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஜனவரி மாதம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – RBI பட்டியல் வெளியீடு!

தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் நலன் கருதி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை ரூ.25 குறைக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த அறிவிப்பானது வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி குடியரசு தினத்தன்று அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய அறிவிப்பு வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!