1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? அமைச்சர் ஆலோசனை!
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து இன்று அதிகாரிகளுடன் கல்வி அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின் ஓராண்டாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அரசின் பல ஊரடங்கு கட்டுப்பாடு நடவடிக்கை காரணமாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. அதனால் கடத்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை பின் பற்றி சுழற்சி முறையில், அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – எளிய முறையில் வினாத்தாள்! சூப்பர் உத்தரவு!
இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்ததால் கடந்த 8ம் தேதியில் இருந்து ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன் பின் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்கியது. அதனால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து வெளியான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
SBI வங்கி கணக்கில் மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தற்போது மழை தாக்கம் குறைந்துள்ளது. மேலும் பல இடங்களில் தேங்கி இருக்கும் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கல்வித் துறை செயலர் அசோக்குமார், பள்ளிக் கல்வி இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் முடிவில் பள்ளிகளை விரைவில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து முதல்வரிடம் ஆலோசனை கேட்டபின் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.