நாடு முழுவதும் ஒரே நாளில் 16,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் கடந்த ஒரு சில வாரங்களாக தீவிரமடைந்து வரும் கொரோனா பரவல் பாதிப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஜூலை 4) ஒரே நாளில் 16,135 பேருக்கு புதிய தொற்று பதிவாகியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மீண்டும் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா பரவல் சூழல் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை 16,000ஐ கடந்துள்ளது. இந்த பாதிப்புகள் கொரோனா 4ம் அலைக்கான ஆரம்பமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜூலை 4) நாடு முழுவதும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 16,135 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோர் விகிதம், பலியானோர் எண்ணிக்கை, இறப்பு விகிதம் குறித்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 16,135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 4,35,18,564 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 24 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,25,223 ஆக அதிகரித்துள்ளது.
TCS நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!
மேலும் கடந்த ஒரு நாளில் 13,958 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,28,79,477 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 98.54% ஆக உயர்ந்துள்ளது. தவிர உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது. இதனுடன் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 1,13,864 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.