காவல்துறையில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு, 125 VAO காலிப்பணியிடங்கள் – முதல்வர் அறிவிப்பு!
ஒரு சில ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்பி விடுவதாகவும், பல தொழிற்சாலைகளை புதுச்சேரி மாநிலத்திற்கு கொண்டு வந்து படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என புதுச்சேரி முதல்வர் காவலர் சமூதாய நலக்கூடத்தில் பேசினார்.
முக்கிய அறிவிப்பு:
புதுச்சேரி காவல் துறையில் அண்மையில் தேர்வு செய்யப்பட்ட 390 காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோரிமேடு காவலர் சமூதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு பணி ஆணை வழங்கி முதல்வர் ரங்கசாமி பேசியது, புதுச்சேரி காவல் துறையில் கடைசியாக 2015 ம் ஆண்டு காவலர்கள் நிரப்பப்பட்டனர். அதன் பிறகு இப்போது தான் காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வந்ததும் காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது முக்கிய நோக்கமாக இருந்தது என கூறினார்.
நாட்டில் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!
இந்த நோக்கத்தின் படி,காவலர் பணியிடங்களை நிரப்பி உள்ளோம். மேலும் நேர்மையாக தகுதியின் அடிப்படையில் காவலர் பணியிடங்களை நிரப்பி உள்ளோம். இந்த காவலர் பணியிடங்களை சேர அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோரிடம் பரிந்துரைகள் வந்தன, அவை அனைத்தையும் உடைத்து எரிந்துவிட்டு விதிமுறைகளின்படி மட்டுமே காவலர் தேர்வினை நேர்மையான முறையில் தான் நிரப்பி உள்ளோம் என குறிப்பிட்டார். மேலும் கடந்த காலங்களில் என் தலைமையிலான ஆட்சியில் கூட 624 ஆசிரியர் தேர்வினை மதிப்பெண் அடிப்படையில் நேர்மையாக நடத்தி முடித்தேன். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி கொடுத்தோம்.
Exams Daily Mobile App Download
இதன் அடிப்படையில், இந்தாண்டிற்குள்ளாகவே 10 ஆயிரம் அரசு காலியிடங்களில் 15% நிரப்பிவிடுவோம். காவலர் துறையில்1,500 காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப உள்ளோம். அதில் சப் இன்ஸ்பெக்டர்கள்-47, காவலர்கள்-322, ஊர்க்காவலர் படையினர்-400, கடலோர காவல் படை-200 பணியிடங்கள் அடுத்தடுத்து விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதேபோல் சுகாதாரத் துறையில், மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி கல்வித் துறையில் 148 பாலசேவிகா ஆசிரியர்களை நியமித்துள்ளோம். பலருக்கும் பணியை நிரந்தரம் செய்துள்ளோம். ஆசிரியர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப உள்ளோம். வருவாய் துறையிலும் 125 வி.ஏ.ஓ.,பணியிடங்கள், எல்.டி.சி.,யு.டி.சி., பணியிடங்கள் நிரப்ப உள்ளோம். இவை அனைத்தும் படித்த இளைஞர்களை கொண்டு தகுதியின் அடிப்படையில் தான் நிரப்ப உள்ளதாக, முதல்வர் அவர்கள் கூறினார்.