ஜூன் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு – அரசு அதிரடி அறிவிப்பு! அச்சத்தில் மக்கள்!
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் எதற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.
144 தடை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் மகா விகாஸ் அரசு கவிழும் நிலையில் உள்ளது. ஏனெனில் கடந்த சில நாட்களாக அரசியலில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுபவர் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா பொதுப்பணித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே என்று கூறப்படுகிறது. அத்துடன் சிவசேனை கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 34 ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தொடர்புகொள்ள முடியாத இடத்தில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Exams Daily Mobile App Download
அதனால் தற்போது சிவசேனை அரசு மிகவும் வலுவிழந்த நிலையில் உள்ளது. அத்துடன் தற்போது முதலமைச்சராக உள்ள உத்தவ் தாக்கரே தான் எப்போது வேண்டுமானாலும் முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று கூறியுள்ளார். இதற்கிடையே அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான எச்சரிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய உத்தரவு!
அதனால் மாநிலத்தில் கலவரம் ஏதும் ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தானே மாவட்டத்தில் அரசியல் நெருக்கடி காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மாநிலத்தில் அரசியல் கூட்டங்கள், போராட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஜூன் 30ம் தேதி வரை தடை என்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் போலீசார்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.