தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான எச்சரிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய உத்தரவு!

0
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான எச்சரிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய உத்தரவு!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான எச்சரிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய உத்தரவு!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான எச்சரிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய உத்தரவு!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்யும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பள்ளிகளுக்கு எச்சரிக்கை:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்கள் பெரும் சிரமத்தில் இருந்தனர். கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது. திட்டமிட்டபடி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். மேலும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகோபால், மதுரை கலெக்டர் அனிஷ்சேகர், முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பள்ளிக்கல்வித்துறையில் அடுத்து செய்ய இருக்கும் மாற்றங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘இல்லம் தேடி கல்வி’ திட்ட தன்னார்வலர்கள் கவனத்திற்கு – ஊக்கத்தொகை விவரங்கள் அறிவிப்பு!

மேலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை நினைத்து மாணவர்கள் மனம் தளர கூடாது என தெரிவித்துள்ளார். தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூலை மாதம் மீண்டும் மறுதேர்வு நடத்தப்படும். அரசு பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் சில பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் விற்பனை செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவ்வாறு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!