TNUSRB தமிழ்நாடு காவல்துறையில் 13,406 காலிப்பணியிடங்கள் – முக்கிய கோரிக்கை!
தமிழக காவல்துறையில் மொத்தம் 13,406 காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளதால் பணியில் உள்ள காவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமையாக உள்ளது. எனவே பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்ததால் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தால் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்து வருகிறது. அந்த வகையில் தமிழக காவல்துறையில் மொத்தம் 13,406 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
நகைக்கடன், வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி தள்ளுபடி – PNB பண்டிகை கால சலுகை!
தமிழகத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் டி.எஸ்.பி காவல்துறை அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் எஸ்.ஐ., முதல் கான்ஸ்டபிள் பதவி வரை தகுதியானோர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி போன்ற உயர் அதிகாரிகள் காலிப்பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படுகின்றன. ஆனால் எஸ்.ஐ., கான்ஸ்டபிள் போன்ற பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பபடாமல் பற்றாக்குறையாகவே உள்ளது.
ரூ.15,000 வரை மாத சம்பளம் வாங்குபவர்கள் கவனத்திற்கு – ரூ.3000 பென்ஷன்! சூப்பர் அறிவிப்பு!
கடந்த ஜூலை கணக்கெடுப்பின்படி எஸ்.ஐ., முதல் கான்ஸ்டபிள் வரையிலான 10,000க்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் அவர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். காவலர்கள் வாரத்தில் ஒரு நாள் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் ஆள் பற்றாக்குறையால் காவலர்களை விடுமுறை எடுக்க அனுமதிப்பதே இல்லை. எனவே காவலர்களின் நலன் கருதி உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.