PF பயனாளிகளுக்கான அகவிலைப்படி 13% உயர்வு – வெளியான சூப்பர் அறிவிப்பு!

0
PF பயனாளிகளுக்கான அகவிலைப்படி 13% உயர்வு - வெளியான சூப்பர் அறிவிப்பு!
PF பயனாளிகளுக்கான அகவிலைப்படி 13% உயர்வு - வெளியான சூப்பர் அறிவிப்பு!
PF பயனாளிகளுக்கான அகவிலைப்படி 13% உயர்வு – வெளியான சூப்பர் அறிவிப்பு!

மத்திய அரசு வருங்கால வைப்பு நிதி பயனாளிகளுக்கான, அகவிலை நிவாரண தொகையை உயர்த்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் படி, CPF பயனாளிகளுக்கான அகவிலை நிவாரணம் 360 சதவீதத்திலிருந்து 373 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அகவிலைப்படி13% உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020, 2021 ஆகிய இரு ஆண்டும் ஜனவரி மாதம் அகவிலைப்படி வழங்குவது நிறுத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 17 சதவீதம் மற்றும் 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், 2022 மார்ச்சில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் படி அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? மே 25ம் தேதி ஆர்ப்பாட்டம்!

இதை தொடர்ந்து வரும் ஜூலை மாதம் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மார்ச்சில் சில்லறை விலைவாசி உயர்வு விகிதம் 6.95 சதவீதமாக அதிகரித்துள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி 38 சதவீதமாக உயர்த்தப்படும் என கருதப்படுகிறது. இதற்கிடையில் ஊழியர்கள் மத்தியில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை, நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்குதல் போன்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையால் வெளியிட்ட அறிக்கையில், CPF பயனாளிகளுக்கு வழங்கப்படும் அகவிலை நிவாரணம் மேம்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த அறிவிப்பு படி, அரசு ஓய்வூதியதாரர்களின் வருங்கால வைப்பு நிதி பயனாளிகளுக்கான அகவிலை நிவாரண தொகை 13 சதவீதம் உயரும், இந்த உயர்வு 1 ஜனவரி 2022 முதல் அமலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் பயனாளிகள் A, B, C மற்றும் D குழுவிற்கு ரூ.3,000, ரூ.1,000, ரூ.750 மற்றும் ரூ.650 போன்ற கருணைத் தொகையை பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 1, 2022 முதல், அடிப்படை தொகையில் 360 சதவீதத்திலிருந்து 373 சதவீத கருணைத் தொகை மற்றும் அகவிலைப்படி நிவாரணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!