தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? மே 25ம் தேதி ஆர்ப்பாட்டம்!
நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றிய வலியுறுத்தல்கள் மீண்டும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி, அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டம்:
தமிழக அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதனை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருவது தான் தமிழக அரசின் தற்போதைய இன்றியமையாத கடமை என்று பலதரப்பிலுருந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது பற்றி பரிசீலித்து வருகின்றன.
ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பு – டிக்கெட்டில் இதை கவனத்திருக்கிறீர்களா?
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. திமுக ஆட்சி அமைந்து ஓராண்டாகி உள்ள நிலையில், இதுவரை பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில் தமிழ்நாடு சட்டமன்ற மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் படி தனிநபர் ஒருவருக்கு 2 லட்ச ரூபாய் செலவாகிறது.
Exams Daily Mobile App Download
அதேநேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி தனிநபர் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய்தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றது என தெரிவித்தார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் அரசு அலுவலர் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், பங்கேற்ற தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் மே 25 ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.