மத்திய அரசு ஊழியர்களுக்கு 13% அகவிலைப்படி (DA) உயர்வு – யாருக்கெல்லாம் பலன்? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 13% அகவிலைப்படி (DA) உயர்வு - யாருக்கெல்லாம் பலன்? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 13% அகவிலைப்படி (DA) உயர்வு - யாருக்கெல்லாம் பலன்? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 13% அகவிலைப்படி (DA) உயர்வு – யாருக்கெல்லாம் பலன்? முழு விவரம் இதோ!

இப்போது 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் சிலர் இதுவரை அகவிலைப்படி பலனை பெறவில்லை என்பதால் அத்தகைய ஊழியர்களுக்கு DA உயர்வு வழங்கப்பட இருப்பதாக என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசின் தொழிற்சங்க ஊழியர்களுக்கு இப்போது இனிப்பான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, 7வது ஊதியக் குழுவின் கீழ் அரசு சமீபத்தில் தனது ஊழியர்களுக்கான மொத்த சம்பளத்தை 3 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதே போல 5 மற்றும் 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கும் அரசு பரிசுத் தொகை வழங்கியது. இப்போது 13% அகவிலைப்படி உயர்வுக்கு பின், மீதமுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு DA வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனென்றால் 7வது ஊதியக் குழுவால், மத்திய அரசு ஊழியர்கள் சிலர் இதுவரை பலன் பெறவில்லை.

ExamsDaily Mobile App Download

அதாவது, மத்திய துறைகள் அல்லது தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரியும் சில ஊழியர்கள் இன்னும் 7வது ஊதியக்குழுவில் சேர்க்கப்படவில்லை. இது குறித்த நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, 5 வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்களின் DA 381 சதவீதமாகவும், 6 வது ஊதியக் குழுவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் DA Dh1.5 சதவீதமாகவும் அதிகரிக்கும். அதாவது 196 சதவீதம் முதல் 203 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஊழியர்களுக்கான உயர்த்தப்பட்ட DA பலன் ஜனவரி 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ஊழியர்களுக்கு 3 மாத சம்பளமும் சேர்த்து வழங்கப்படும்.

சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆய்வு!

சமீபத்தில் மத்திய அரசு, தனது ஊழியர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஊழியர்களின் மொத்த DA 34% ஆக உயர்ந்துள்ளது. இந்த ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்துக்குள் 3 மாத சம்பளம் வழங்கப்படும். இதனுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கான பிற கொடுப்பனவுகளும் அதாவது கல்விக் கட்டணம், பயணக் கொடுப்பனவு மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இப்போது அகவிலைப்படி தவிர மற்ற கொடுப்பனவுகளின் அதிகரிப்பு ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!