மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் 12வது தவணை நிதியுதவியை பெற வேண்டுமா? முழு விவரம் இதோ!
மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் கீழ் 12வது தவணைப் பணத்தை பெறுவதற்கு தகுதியுள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் உங்களை பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.
PM கிசான் திட்டம்:
நாடு முழுவதும் உள்ள நலிவடைந்த விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசாங்கம் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6000 நிதிப்பணத்தை 3 தவணைகளில் பெற்று வருகின்றனர். சமீபத்தில் கூட இந்த திட்டத்திற்கான 11வது தவணைப் பணத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதன் மூலம் சுமார் 10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.21,000 கோடி நிதிப்பணம் மாற்றப்பட்டது. இப்போது அரசின் இந்த நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் இந்தத் திட்டத்தில் உங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பழனி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – ஜூலை 8ம் தேதி கடைசி நாள்!
இப்படி செய்தால் PM கிசான் திட்டத்தின் 12 வது தவணையாக ரூ.2000 பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். தவிர நீங்கள் PM Kisan திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பயனராக இருந்தால் இதன் பலனை முழுமையாக பெறுவதற்கு KYC நெறிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த வகையில் PM கிசான் கணக்குடன் KYC செயல்முறைக்கான கடைசி தேதி ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது OTP அடிப்படையிலான eKYC சேவை PM KISAN போர்ட்டலில் கிடைக்கிறது. இது தவிர பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC க்கு அருகிலுள்ள CSC மையங்களையும் தொடர்புகொள்ளலாம்.
PM கிசான் திட்டத்தில் உங்களை பதிவு செய்து கொள்ள:
- முதலில் pmkisan.gov.in என்ற இணையதளத்தை திறக்கவும்.
- இதில் ‘விவசாயிகளின் கார்னர்’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- தொடர்ந்து புதிய விவசாயிகள் தங்களை இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
- இப்போது விவசாயிகள் விண்ணப்பத்தை பதிவு செய்தவுடன் அது மாநில நோடல் அதிகாரிகளால் சரிபார்ப்பு செய்யப்படும்.
- இந்த சரிபார்க்கப்பட்ட விண்ணப்பம் PM கிசான் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
- அதற்கு பிறகு இந்த விவரங்களில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பினால் edit ஆப்ஷன் உதவியுடன் இதை மேற்கொள்ளலாம்.