பழனி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – ஜூலை 8ம் தேதி கடைசி நாள்!
தமிழகத்தில் பழனி திருக்கோயிலில் மருந்தாளுநர் பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வி, வயது உள்ளிட்ட தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.05.2022 அன்று நிலவரப்படி 35 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். இப்பணியில் தகுதியான நபர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இதற்கான பணியாணை ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 16ம் தேதி பள்ளிகள் திறப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அத்துடன் விண்ணப்பதாரர் நன்னடத்தை உடையவர் என்று தகுதி பெற்ற அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் நன்னடத்தை சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த சான்றிதழின் நகலினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலாது. இதனை தொடர்ந்து அரசு மற்றும் பொது ஸ்தாபனம் மற்றும் இதர திருக்கோயில்கள் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களும் விண்ணப்பிக்க இயலாது.
அத்துடன் பணியில் நியமிக்கப்படுபவர்கள் ரூ.100க்கான ஒப்பந்த பத்திரத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://palanimurugan.hrce.tn.gov.in/ அல்லது https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற திருக்கோயிலின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விண்ணப்ப படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து அதில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
பணியிடத்தின் பெயர்: மருந்தாளுநர் (சித்தா)
மாத சம்பளம்: ரூ. 15000.
கல்வி தகுதி: சித்த மருத்துவத்தில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் (தமிழ்நாடு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது)
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர்/செயல் அலுவலர்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பழனி – 624601
திண்டுக்கல் மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.07.2022 மாலை 5.45 வரை.