11ம் வகுப்பு தேர்வு அக்.27ம் தேதி தொடக்கம் – மாநில கல்வித்துறை அறிவிப்பு!

0
11ம் வகுப்பு தேர்வு அக்.27ம் தேதி தொடக்கம் - மாநில கல்வித்துறை அறிவிப்பு!
11ம் வகுப்பு தேர்வு அக்.27ம் தேதி தொடக்கம் - மாநில கல்வித்துறை அறிவிப்பு!
11ம் வகுப்பு தேர்வு அக்.27ம் தேதி தொடக்கம் – மாநில கல்வித்துறை அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் வரும் அக்.27ம் தேதி பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த அம்மாநில பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நேரடி தேர்வு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து தற்போது குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி மாணவர்கள் கற்றல் அடிப்படையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரள மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்து வந்தது. ஏனெனில் அங்கு உருமாறிய கொரோனா சமீபத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் பெரும்பாலான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதனை தடுக்கும் விதமாக திருவனந்தபுரம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு காலாண்டு, அரையாண்டு & மே மாத விடுமுறை படி – முக்கிய அறிவிப்பு!

அதனால் தற்போது கொரோனா தொற்று பரவல் கேரள மாநிலத்தில் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். அதன்படி நேற்று ஒரே நாளில் 9361 பேருக்கு புதிதாக தொற்று பரவியுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொற்றால் பாதித்தவர்கள் 99 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா குறைந்து வருவதால் கடந்த அக்.18ம் தேதி பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கேரளாவில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வந்தது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – சுகாதாரத்துறை செயலர் முக்கிய தகவல்!

அதனை தொடர்ந்து கொரோனா தொற்று அதிக அளவில் பாதிக்கப்பட்டதன் காரணமாக தேர்வு தள்ளிவைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் தேர்வை தள்ளிவைத்து மீண்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அக்.27ம் தேதி தேர்வு தொடங்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தான் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!