தமிழக அரசு ஊழியர்களுக்கு காலாண்டு, அரையாண்டு & மே மாத விடுமுறை படி – முக்கிய அறிவிப்பு!
அரசுப் பணியாளர்களுக்கான தற்செயல் விடுப்பை தவிர காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மற்றும் மே மாத விடுமுறை காலங்களுக்கு மாற்றுத்திறனாளிகளின் ஊர்திப்படியில் பிடித்தம் செய்யக்கூடாது என்று தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் கடிதம் வெளியிட்டுள்ளார்.
ஊர்திப்படி:
தமிழக அரசு பணியாளர்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் பணிக்கு வர ஏதுவாக மாதம் தோறும் ஊர்திப்படிக்கு என்று தனியாக தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி ஊழியர்களின் தனிப்பட்ட தற்செயல் விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை பொறுத்து ஊர்திப்படியில் பிடித்தம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக, மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – சுகாதாரத்துறை செயலர் முக்கிய தகவல்!
அதில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, முழு ஆண்டு தேர்வு மற்றும் ஏனைய அரசு விடுமுறை நாட்களுக்கு ஊர்திப்படியில் இருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படாத நிலையில் சில பள்ளிகளில் பார்வைத்திறன் குறைபாடு, கை, கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஊர்திப்படியில் மேற்கண்ட நாட்களுக்கு ஊர்திப்படியில் பிடித்தம் செய்யப்படுகிறது என்று மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் சங்கத்தினரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் முக்கிய ஆலோசனை! விரைவில் அறிவிப்பு!
இதற்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் அவர்கள், அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தற்செயல் விடுப்பைத் தவிர பிற விடுமுறை நாட்களில் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை நாட்கள் பணிக்காலமாக கருதப்படுவதால் பார்வைத்திறன் குறைபாடு, கை, கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு ஊர்திப்படி வழங்கலாம் என்று அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.