தமிழகத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – காரணம் இதோ!
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்கரன் கோவிலில் நடைபெற்று கொண்டிருக்கும் ஆடித்தவசு திருவிழாவின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடி மாதம் என்றாலே சிறப்பு பூஜைகள், திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்கரன் கோவிலில் ஆடி மாதத்தில் ஆடித்தவசு திருவிழா நடத்தப்படுவதுண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக சங்கரன் கோவிலில் ஆடித்தவசு திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஆடித்தவசு திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு பல ஊர்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. இதனிடையே, ஆடித்தவசு திருவிழா கடந்த ஜூலை 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. மேலும், இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையடுத்து, சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை – அவசர கட்டுப்பாட்டு மைய தொடர்பு எண் அறிமுகம்!
இதனால், தென்காசி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 10 ஆம் தேதி அரசு பொதுத்தேர்வு எதுவும் அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த மாணவர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 13 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
No comends