தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை – அவசர கட்டுப்பாட்டு மைய தொடர்பு எண் அறிமுகம்!

0
தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை - அவசர கட்டுப்பாட்டு மைய தொடர்பு எண் அறிமுகம்!
தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை - அவசர கட்டுப்பாட்டு மைய தொடர்பு எண் அறிமுகம்!
தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை – அவசர கட்டுப்பாட்டு மைய தொடர்பு எண் அறிமுகம்!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பொதுமக்கள் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அமைச்சர் அறிவித்துள்ளார்.

கனமழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் தமிழகத்தில் இன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

TNPSC Group 4 ஆன்சர் கீ பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ

அத்துடன் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ள மாவட்டங்களில் தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் பொதுமக்கள் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள 1077 மற்றும் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 94458 69848 என்ற வாட்ஸ்அப் எண் உள்ளிட்டவைகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிவித்துள்ளார். இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!