TNPSC தேர்வாணையத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் உதவி இயக்குநர் பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக எவ்வித போட்டித்தேர்வுகளும் நடைபெறவில்லை. இந்தாண்டு பாதிப்புகள் குறைந்து மக்கள் தொற்றில் இருந்து மீண்டு வருவதால் TNPSC தேர்வுகளை நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தற்போது அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) உதவி இயக்குநர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விரும்புபவர்கள் அறிவியல் அல்லது உளவியல் அல்லது சமூகவியல் அல்லது குழந்தை மேம்பாடு அல்லது உணவு மற்றும் ஊட்டச்சத்து அல்லது சமூகப் பணி அல்லது மறுவாழ்வு அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு 32 க்குள் இருக்க வேண்டும். இதில் SC/ST/MBC/OBC மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. தகுதியுடையோர் tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
TNPSC Group 4 ஆன்சர் கீ பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ
மேலும் விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 23ம் தேதி வரை விண்ணப்பத்தில் மாற்றம் செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது. மொத்தம் 11 காலியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்கும் பொது விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 மற்றும் தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக எழுத்து தேர்வானது நவம்பர் 5ம் தேதி கணினி வழியாக நடைபெற உள்ளது.
Work part of life