இந்தியாவில் ட்ரோன் தயாரிப்பில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு, ரூ.5,000 கோடி முதலீடு – மத்திய அரசு!
இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஆளில்லா விமானம் என்றழைக்கப்பட கூடிய ட்ரோன்களின் தயாரிப்புக்கு சுமார் ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்படுவதாகவும், 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ட்ரோன் தயாரிப்பு
உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து வரும் ட்ரோன்கள் மூலம் வல்லரசு நாடுகள் பல வகையான சேவைகளை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் வீட்டு விநியோகம் முதல் ராணுவ சேவைகள் வரை ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. அதே போல இந்தியாவிலும் விவசாய பணிகள் துவங்கி மருந்து விநியோகம் வரை ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ட்ரோன்களுக்கான புதிய விதிகளை சமீபத்தில் அறிமுகம் செய்த மத்திய அரசு அதன் தயாரிப்பு பணிகளுக்காக சுமார் 5,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
அதாவது தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ட்ரோன்களின் உதிரி பாகங்களுக்கான உற்பத்தியை அதிகரிக்க இத்தொகையை முதலீடு செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், ‘இந்தியாவில் ட்ரோன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களின் அடுத்த 3 ஆண்டுகால உற்பத்திக்காக, ரூ.120 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த தொகை ட்ரோன் உற்பத்தி துறையின் ஒட்டுமொத்த தயாரிப்பு அளவை விட, 1.5 மடங்கு அதிகமாகும்.
இதனுடன் டிரோன்களின் தயாரிப்புக்காக அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் செய்யப்பட்டு, ரூ.900 கோடி விற்று முதலை அடைய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் 2030 ஆண்டுக்குள் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அதாவது இந்தியாவை சர்வதேச ட்ரோன் மையமாக உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம்’ என குறிப்பிட்டுள்ளார்.
TCS, Wipro & Infosys நிறுவனங்களில் வேலைவாய்ப்பு – ஊதிய உயர்வு விளக்கம்!
மேலும் மத்திய அரசின் இந்த இலக்கை அடைய, தொழில்துறை, சேவை விநியோகம் மற்றும் நுகர்வோருக்கு மத்திய அமைச்சகம் ஆதரவு அளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இது தவிர ட்ரோன் சேவைகள் துறையில் செயல்பாடுகள், சரக்கு போக்குவரத்து, தரவு செயல்முறை, போக்குவரத்து மேலாண்மை போன்றவை முக்கியமாக கருதப்படுகிறது. அதனால் இந்த சேவைகளிலும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.30,000 கோடி அளவில் உயரும் எனவும், 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.